கணவரின் தொடர் கொடுமை! தீக்குளித்து மனைவி தற்கொலை!

 
கணவரின் தொடர் கொடுமை! தீக்குளித்து மனைவி தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நல்லடிசேனை கிராமத்தில் வசித்து வருபவர் உஷல். இவருக்கு வயது 47. இவருடைய மனைவி சுமதி. இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை. அவருடைய கணவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். பல நேரங்கள் வாக்குவாதங்களும் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்ட நாட்களும் உண்டு. கணவரின் தொடர் துன்புறுத்தலால் மனவேதனை அடையும் சமயங்களில் எல்லாம் சுமதி பொன்னூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவதும் வழக்கம் தான். சில நாட்களில் மீண்டும் சுமதியை அழைத்து வந்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

அதே போல் ஒரு சம்பவம் ஜூலை 29 இரவு வழக்கம்போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். உடனே வீட்டில் இருந்த மண்ணெண்யை எடுத்து அதிகாலை 4 மணிக்கு உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்ற ஆரம்பித்ததும் கூச்சலிட்டு அலறினார்.

அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து சுமதியை வந்தவாசி அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமதி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமதியின் கணவர் உஷல் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web