சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் ! புகார் கொடுத்தவருக்கு கத்திக்குத்து!

 
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் ! புகார் கொடுத்தவருக்கு கத்திக்குத்து!


திருவாரூர் மாவட்டம் குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தில் வசித்து வருபவர் மகாலிங்கம் . இவர் பா.ஜ.க ஒன்றிய பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்யவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அச்சிறுமிகளிடம் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் ! புகார் கொடுத்தவருக்கு கத்திக்குத்து!


இதனையடுத்து பா.ஜ.க பிரமுகர் மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், சிறுமிகளிடம் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புகார் அளித்த ஒரு சிறுமியின் தந்தையை மகாலிங்கத்தின் மகன்கள் ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து, கத்தி மற்றும் கம்பால் தாக்கினர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் ! புகார் கொடுத்தவருக்கு கத்திக்குத்து!

அதைத் தடுக்க வந்த மற்றொருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.
படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜவகர், சுதாகர், இளஞ்சேரன், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web