வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி காலமானார்
Aug 19, 2021, 14:26 IST
வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி செங்குட்டுவன் (வயது 65) கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
அவருடைய உடல் காட்பாடி திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு. இன்று மாலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன செய்யப்படுகிறது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
From around the
web