விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை

 
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மே 10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 35 நாட்களை கடந்து ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை

இந்நிலையில் மதுபிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதும் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் ஆரவாரத்துடன் கடைகளுக்கு வந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபாட்டில்களும் மளமளவென விற்று தீர்ந்தன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 104 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 227 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி வகைகள் 4,999 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,287 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை

இதன் மூலம் ரூ.4.82 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இது சாதாரண நாட்களில் விற்பனையாகக்கூடிய சராசரியான விற்பனை தொகை என்றும் எதிர்பார்த்த அளவிற்கு கூடுதலாக விற்பனை ஆகவில்லை என்றும் டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

From around the web