வரதட்சணை பணத்தை தந்தையிடமே திருப்பிக் கொடுத்த மகள்..!!

 
வரதட்சணை பணத்தை தந்தையிடமே திருப்பிக் கொடுத்த மகள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சிங் கானோட் மகளுக்கு கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடந்துள்ளது. அந்த ஊர் வழக்கப்படி மகள் புகுந்த வீட்டுக்கு செல்லும் கணவர் வீட்டில் அவர் வாழுவதற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்புவது வழக்கம்.

கிஷோர் சிங் கானோட் மகள் புகுந்த வீட்டுக்கு புறம்படும் போது குறிப்பிட்ட தொகை ஒன்றை அவர் கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்துவிட்ட மகள், பெண்களின் முன்னேற்றத்துக்கு பயனளிக்கும் வகையில் மகளிர் விடுதி ஒன்றை கட்டுமாறு தெரிவித்துள்ளார்.

மகளின் சமூக அக்கறை குறித்து நெகிழ்ந்து போன தந்தை உடனடியாக தொகை எதுவும் குறிப்பிடாமல் மகளுக்கு காசோலை வழங்கினார். பெண்கள் முன்னேற்றத்தின் மீதான மணமகளின் சிந்தனைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web