4 மாநிலங்களில் காலியாக உள்ள மேலவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

 
4 மாநிலங்களில் காலியாக உள்ள மேலவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கர்நாடகா சட்ட மேலவையில் 20 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா சட்ட மேலவையில் 5 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இம்மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு 2021 நவம்பர் 16 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 23.

4 மாநிலங்களில் காலியாக உள்ள மேலவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

வேட்பு மனுக்களின் பரிசீலனை 2021 நவம்பர் 24 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 26.

2021 டிசம்பர் 10 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் 2021 டிசம்பர் 14 அன்று எண்ணப்படும். 2021 டிசம்பர் 16-க்குள் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைய வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொவிட்-19 விரிவான விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்.

From around the web