தொடரும் கனமழை! ரயில்கள் ரத்து!

 
தொடரும் கனமழை!  ரயில்கள் ரத்து!

இந்தியாவில் வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தென்மாநிலங்களில் இருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளன.

பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

தொடரும் கனமழை!  ரயில்கள் ரத்து!

அப்பகுதிகளில் ரயில் நிலையங்கள், தண்டவாளங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வடமாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பல ரயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கர்நாடகா, கேரளா, தமிழகம் போன்ற தென்மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

From around the web