இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

 
இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சில பகுதிகளில் கனமழையால் வீடுகள் இடிந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த செய்திக்குறிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அரசின் மீட்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

From around the web