மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை
Jun 16, 2021, 11:15 IST
இந்தியாவில் தென்மேற்கு பரவமழை தொடங்கியதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 9-ம் தேதி முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த ஒரிரு நாட்களுக்கு பின்னர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மேலும் மும்பையில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
From around the
web