கேரளாவில் 1,38,124 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

 
கேரளாவில் 1,38,124 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கேரளாவில் இன்று (ஜூலை 24) ஒரே நாளில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி 98 உயிரிழந்துள்ளார்.

மாநிலத்தில் 1,38,124 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,969 தாண்டியது. இன்று ஒரே நாளில் 15,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனிடையே கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த ஜிகா வைரசால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஐ எட்டி உள்ளது.

இவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

From around the web