இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

 
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றுள்ளார்.

இந்த போட்டியில் கடைசி முயற்சியில் 83.18 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை வெற்றி பெற்றார்.

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.07 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web