விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்சன்! மத்திய அரசு அதிரடி!

 
விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்சன்! மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்கும் அடிப்படையில் 2018ல் தொடங்கப்பட்டது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். நாடு முழுவதும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு நிதி உதவி தவிர மேலும் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்சன்! மத்திய அரசு அதிரடி!

இந்நிலையில் தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில், விவசாயிகள் கூடுதல் பயன் பெறும் வகையில் மற்றொரு திட்டத்தில் அவர்கள் இணையலாம். பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 12 மாத தவணைகளில் மாதத்துக்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் இந்த கிசான் மந்தன் திட்டத்திலும் இணைந்து பயனடையலாம் என்பதாகும்.

விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்சன்! மத்திய அரசு அதிரடி!

நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்சன் வடிவில் நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்சன்! மத்திய அரசு அதிரடி!

30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web