மும்பைக்கு ரெட் அலர்ட்! மிக மிக கனமழைக்கு பெய்யும்!

 
மும்பைக்கு ரெட் அலர்ட்! மிக மிக கனமழைக்கு பெய்யும்!

மும்பையில் தற்போது மிகவும் அதிகளவில் கனமழை பெய்து வருவதால் மும்பையின் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில், தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்றும், மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கடந்த 2 நாட்களில் பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

From around the web