கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000 நிதி!! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

 
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000 நிதி!! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் அதிகம் பாதித்த மாநிலமாக கர்நாடகா உள்ளது. அங்கு வைரஸ் தொற்றுக்கு இதுவரை 32,913 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும் குடும்பத்தலைவர்கள் பலரும் உயிரிழந்ததால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000 நிதி!! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில் யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் நிவாரண நிதி அறிவித்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான (பி.பி.எல்.) ரேஷன் அட்டையை வைத்து இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000 நிதி!! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

இந்த திட்டம் மூலம் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். இந்த திட்டம் கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரையில் வைரஸ் தொற்றால் பலியான பி.பி.எல். ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web