அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,500! முதல்வர் அறிவிப்பு!

 
அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,500! முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா 2வது அலை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் அறிவிப்பு வெளியான பிறகும் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை திமுக தலைவர் சிவா, மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை உடனடியாக கொடுங்கள் என்று கடுமையாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிவாரணம் முதல் தவணை ரூ.1500 வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியது. அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.1500 கிடைக்கும் என அம்மாநில அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web