அதிர்ச்சி! இந்தியாவில் புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ !

 
அதிர்ச்சி! இந்தியாவில் புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ !

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2′ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளதாகவும், இந்த வகை வைரஸ்கள், இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி! இந்தியாவில் புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ !

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவி வருவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போதைய நிலையில் புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. இருந்த போதிலும் அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web