அதிர்ச்சி! கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

 
அதிர்ச்சி! கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!


மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.இந்த கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

இந்த இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.பெரும் காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்

இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தகவல் அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்த மகாராஷ்டிர அமைச்சர் மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web