அதிர்ச்சி வீடியோ! பார்க்கிங்க்கில் நிறுத்தப்பட்ட காரை விழுங்கிய சிங்க்ஹோல்..!

 
அதிர்ச்சி வீடியோ! பார்க்கிங்க்கில் நிறுத்தப்பட்ட காரை விழுங்கிய சிங்க்ஹோல்..!


மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காரை சிங்க்ஹோல் ஒன்று முழுவதும் விழுங்கியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


மும்பையில் சில நாட்களாக பருவமழை காரணமாக கட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நீல நிற கார் ஒன்று முழுவதுமாக சிங்க்ஹோலில் மூழ்கியுள்ளது. முதலில் இந்த காரின் முன்பகுதி சக்கரங்கள் உள்ளே சென்றது, அதனை தொடர்ந்து காரின் பின்பகுதியும் பின்னர் முழுவதுமாக கார் தண்ணீரில் மறைந்துவிடுகிறது.

இதனால் இந்த இடத்தில் இதற்கு முன் கிணறு இருந்தது என்பது தற்போது வீடியோவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சிங்க்ஹோல் வாகன நிறுத்துமிடத்திற்கு கீழே மூடப்பட்ட கிணறு என்பதை உறுதி செய்துள்ளனர். இந்தக் கிணறு குடியிருப்பு பகுதியில் இருப்பவர்களால் மூடப்பட்டு இவ்விடத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றியுள்ளனர். கனமழை காரணத்தால் இந்த கிணறு தண்ணீரால் நிரம்பியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web