ஒருமுறை போடும் கொரோனா ஊசி- விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!
Nov 25, 2021, 17:01 IST
இந்தியாவில் ரஷ்யாவின் ’ஸ்புட்னிக் வி’ என்கிற தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. எனினும் இந்த மருந்து இரண்டு டோஸ்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை முதல் டோஸாக எடுத்துக் கொண்டால், இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்வது கட்டாயமாகும். கொரோனாவுக்கு எதிரான போரில் 80 சதவீத வரை ஸ்புட்னிக் வி பயனளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அடுத்ததாக ரஷ்யாவினால் அறிமுகம் செய்யப்படும் ஸ்புட்னிக் லைட் குறித்து பேசிய, அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் ட்மிட்ரிவ், கடந்த செப்டம்பர் மாதம் இதற்கான சோதனைகள் தொடங்கின
இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இதன்மீதான சோதனையை நடத்த அனுமதி வழங்கியது. அடுத்த மாதம் முதல் இது பயன்பாட்டுக்கு வருவதாக அவர் கூறினார்.
From around the
web