SSLC, +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது!

 
SSLC, +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கேரளாவில் நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வுகள் அனைத்தும் கேரளாவில் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ்-2 செய்முறை தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கபப்ட்டிருந்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இம்மாதம் 24ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSLC, +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கேரளாவில் அரசு போக்குவரத்து முழுவதுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தமிழகம், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கான, இமாச்சல் பிரதேசம் என பல மாநிலங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்த நிலையில், கேரள அரசு பிளஸ்-2 தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு விடைத்தாள் திருத்தும் பணிக்கும் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web