ஜிகா வைரஸ்: கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு.. பாதிப்பு 35 ஆக உயர்வு

 
ஜிகா வைரஸ்: கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு.. பாதிப்பு 35 ஆக உயர்வு

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும், ஜிகா வைரஸூம் கேரளாவை மிரள வைத்து கொண்டிருக்கிறது.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உள்பட இன்னும் சிலருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசு தீவிரமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வரை 30 பேர் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

From around the web