பொதுமக்களே உஷார்! 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்! WHO!

 
பொதுமக்களே உஷார்! 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்! WHO!


உலகம் முழுவதும் கொரோனா ஒன்றரை ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக சுமார் 2 கோடிக்கும் அதிமானவர்கள் பாதிப்படைந்தனர். 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் எதிரொலித்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

பொதுமக்களே உஷார்! 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்! WHO!

அதேநேரத்தில் 3வது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை தாக்கக்கூடும் எனவும், அதன் தாக்கம் மற்ற அலைகளை விட குறைவாக இருக்கும் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடக்கத்தில் இருக்கிறோம் .

பொதுமக்களே உஷார்! 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்! WHO!

உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் 111க்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே 3ஆவது அலை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தும் முன் உரிய நடவடிக்கை தேவை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

From around the web