”தேவியை நேரில் காணமுடியவில்லை”!! அமலா பால் கோவிலில் இருந்து வெளியேற்றம்!!

 
அமலாபால்

தமிழ் திரையுலகில் வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ’மைனா ‘ மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் 2009ல் ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மைனா படத்தில் மலைகிராம பெண்ணாகவே வாழ்ந்த அமலா பால் அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம்  முண்ணனி கதாநாயகிகளில் ஒருவரானார். 

அமலாபால்
தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்து  2014ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் பிரிந்துவிட்டனர்.  தற்போதும் மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.கடைசியாக அமலா பால் நடிப்பில் ‘கடாவர்’ படம் வெளியானது. இப்படத்தை நடிகை அமலா பாலே தயாரித்திருந்தார்.  நடிகை அமலா பால் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் சென்ற போது தனக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இன்னும்  மத பாகுபாடு உச்சம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் ஜனவரி 16ம் தேதி திங்கட்கிழமை கோயிலுக்குச் சென்றபோது, அவருக்கு கோவில் அதிகாரிகளால் தரிசனம் மறுக்கப்பட்டது. கோவிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உள்ளே அனுமதிக்க இயலாது என கூறப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டதாம்.  இதனால் மிகுந்த மன வருத்தத்துடன்  கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து அம்மனை தரிசனம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இந்த அனுபவத்தை கோவிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலா பால் பகிர்ந்துள்ளார்.

அமலாபால்

அதில் ‘அம்மாவை நேரில்  காணாவிட்டாலும் அதனை உணர்ந்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023ம் ஆண்டில் கூட மதப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து அந்த உணர்வை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். நேரம் வரும், நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்ல, சமமாக நடத்தப்படுவோம்" என அமலா பால் கோவில் பார்வையாளர் பதிவேட்டில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த  கோவில் அறக்கட்டளை நிர்வாகி  மற்ற மதத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்துள்ளனர். ஆனால் அதுவே பிரபலம் என்கிறபோது பெரும் சர்ச்சையாகி விடுகிறது என தெரிவித்துள்ளார். அமலா பாலுக்கு மதத்தை காரணம் காட்டி கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web