ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

 
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் காட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் மல்லிகா. இவர் பல காலமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளின் பாதுகாப்பிற்காக நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

தற்போது அவரது பட்டியில் ஆடும் நாயும் ஒரே காலத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. நாய் தனது குட்டிகளை அரவணைத்து செல்லுகிறது. ஆனால் தாய் ஆடு அவ்வப்போது குட்டிகளை விட்டு தனியாக மேய்ச்சலுக்கு சென்றுவிடுகிறது.

இதனால் ஆட்டுக் குடிகள் பசியில் வாடி வருவதை கண்ட மல்லிகா ஒரு நாள் நாயிடம் ஆடுகளை பால் குடிக்க விட்டிருக்கிறார். தற்போது இதனை நாய் வாடிக்கையாக்கி கொண்டது. இதனால் நாய் தன்னுடைய குட்டி என நினைத்து ஆட்டு குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது.

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்!!

நாய் ஒன்று ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் வினோத நிகழ்வை அப்பகுதி மக்கள் வந்து அதிசயமாக தினமும் வந்து பார்த்துச் செல்கின்றனர். இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web