வருகிறது கொரோனா 3வது அலை ! குழந்தைகளுக்கு வார்டு தொடக்கம்!

 
வருகிறது கொரோனா 3வது அலை ! குழந்தைகளுக்கு வார்டு தொடக்கம்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா 3 வது அலை குறித்த அச்சம் மக்கள் மனதில் பரவி வருகிறது. அதிலும் வர இருக்கும் இந்த 3 வது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வருகிறது கொரோனா 3வது அலை ! குழந்தைகளுக்கு வார்டு தொடக்கம்!


அந்த வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கான பிரத்யேக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை போன்று குழந்தைகளுக்கான ஜீரோ டிலே வார்டும் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிறது கொரோனா 3வது அலை ! குழந்தைகளுக்கு வார்டு தொடக்கம்!


கொரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ராஜாஜி மருத்துவமனையில் 11 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு பிரிவில் தற்போது இரு குழந்தைகள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் எனவும் அரசு மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3வது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

From around the web