16 தமிழக மீனவர்கள் கைது... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது இதனால் மீனவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அத்துடன் அவர்களின் படகுகள், மீன்பிடி பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து வருகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தெரிகிறது. 16 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்கிறது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!