‘வாட்ஸ்-அப்’க்கு ரூ.213 கோடி அபராதம்... NCLATயில் வழக்குத் தொடர்ந்தது மெட்டா நிறுவனம்!

 
வாட்ஸ் அப்
 

 

வாட்ஸ்அப்பின் 2021 தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு ரூ. 213 கோடி அபராதம் விதித்த இந்தியாவின் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) சமீபத்திய உத்தரவை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) நேற்று மெட்டா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ்அப் தனது தளத்தில் சேகரிக்கப்பட்ட பயனர்களின் தரவை விளம்பர நோக்கங்களுக்காக மற்ற மெட்டா தயாரிப்புகள் அல்லது நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போட்டி கண்காணிப்பு அமைப்பு, மெட்டாவை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது.

வாட்ஸ் அப்

CCI உத்தரவு ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், எனவே, இந்த விவகாரத்தில் அவசர விசாரணை தேவைப்படும் என்றும் மெட்டா இப்போது NCLATல் தொடரப்பட்ட வழக்கில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 16ம் தேதி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலி, 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு CCI தனது தளத்தில் சேகரிக்கப்பட்ட பயனர் தரவை மற்ற மெட்டா தயாரிப்புகள் அல்லது நிறுவனங்களுடன் விளம்பர நோக்கங்களுக்காக 5 ஆண்டுகளுக்குப் பகிர வேண்டாம் என்று வாட்ஸ்அப்பை கேட்டுக் கொண்ட பிறகு, மெட்டா நிறுவனம் CCIன் முடிவை ஏற்கவில்லை என்றும் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் கூறியிருந்தது.

CCI உத்தரவின்படி, “2021ம் ஆண்டுக்கான வாட்ஸ்அப் கொள்கைப் புதுப்பிப்பு, 'டேக் இட் ஆர் லீவ்-இட்' அடிப்படையில் சட்டத்தின் கீழ் நியாயமற்ற நிபந்தனைகளை விதிக்கிறது. ஏனெனில் இது அனைத்து பயனர்களையும் விரிவாக்கப்பட்ட தரவு சேகரிப்பு விதிமுறைகள் மற்றும் பகிர்வுகளை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது"

வாட்ஸ் அப்

இது குறித்து பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர், “ 2021 வாட்ஸ்அப் புதுப்பிப்பு மக்களின் தனிப்பட்ட செய்திகளின் தனியுரிமையை மாற்றவில்லை என்றும் அந்த நேரத்தில் பயனர்களுக்கு ஒரு தேர்வாக வழங்கப்பட்டது” என்றும் கூறினார்.

“இந்த புதுப்பித்தலின் காரணமாக யாரும் தங்கள் கணக்குகளை நீக்கவோ அல்லது வாட்ஸ்-அப் சேவையின் செயல்பாட்டை இழக்கவோ கூடாது என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். இந்த அப்டேட் வாட்ஸ்அப்பில் விருப்ப வணிக அம்சங்களை அறிமுகப்படுத்துவது பற்றியது, மேலும் நாங்கள் தரவை எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்கியது" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கையில் மார்ச் 2021ல் CCI விசாரணையைத் தொடங்கியது. இது பேஸ்புக் (தற்போது மெட்டா) மற்றும் அதன் நிறுவனங்களுடன் கட்டாய தரவுப் பகிர்வு மற்றும் தரவு சேகரிப்பின் விரிவாக்கப்பட்ட நோக்கத்தை செயல்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web