பதுக்கிய 3 ராட்சத ஆமைகள் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன!

 
ஆமை
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில், தடை செய்யப்பட்ட கடல் ஆமை இவைகளை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன்படி தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் வனச்சரக அலுவலர் ஜினோ பிளஸ்ஸில் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் 3 கடல் ஆமைகள் இருந்தது தெரிய வந்தது. 

ஆமை


உடனடியாக, கீழுர் அரசு உதவி கால்நடை மருத்துவர் வினோத் அங்கு சென்று ஆமைகளின் உடல்நிலையை பரிசோதித்து அறிந்தார்.  ஆமைகள் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும், இது பச்சை ஆமை வகையை சேர்ந்தது. இதில் 2 ஆமைகள் தலா 200 கிலோ, ஓர் ஆமை சுமார் 70 கிலோ எடை இருந்தது. இவை உயிருடன் இருந்ததால், உடனடியாக அவற்றை கடலில் விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையில், 3 ஆமைகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.

ஆமை

இதனை தொடர்ந்து   கால்நடை உதவி மருத்துவர்  , மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனவர் , வனப்பாதுகாப்பு படை வனவர் , வனக்காப்பாளர்கள் சுதாகர், மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், மீனவர்கள் படகு மூலம் 3 ஆமைகளையும் கடலுக்குள்  சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சென்று ஆழமான பகுதியில் கடலில் விட்டனர். இந்த ஆமைகளை பிடித்தவர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web