ஒரே பெயரில் 32 சிம்கார்டுகள்!! 4-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் திருமணம்!! பணத்தை சுருட்டிய கில்லாடி பெண்!

 
அபிநயா

ஒரு திருமணத்தை நடத்த ஆயிரம் பொய் கூறலாம் என்ற பழமொழி உண்டு. ஆனால்  பல ஆயிரம் பொய்களை கூறி நான்கு ஆண்களை திருமணம் செய்து பணத்தை சுருட்டியுள்ளார் கில்லாடி பெண். சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். வயது 25. இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு   காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம்  கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில்   பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

ரூ. 35,000 பணத்துக்காக சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்..!!

திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 சவரன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே  செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த  அபிநயாவை போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.  மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது. அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து நடராஜனை திருமணம் செய்து   பணத்தை சுருட்டிச்சென்றுள்ளார். அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் போலிசார் விசாரணையில்   தெரிய வந்துள்ளது.

5வது திருமணம்

அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்கமாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி செல்வதையே தொழிலாக வைத்துள்ளார்.   இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது இரண்டாவது கணவர் செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகளை வாங்கி வைத்து அதன் மூலம்  ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து  ஏமாற்றி வந்ததும் போலிசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

From around the web