சென்னை விமான நிலையத்தில் 3டி இயற்கை காட்சிகள்... பயணிகளுக்கு புதிய அனுபவம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக பிரமிக்க வைக்கும் 3டி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வருகை பகுதி 1 மற்றும் 3 முனையங்களிலும், சர்வதேச வருகை பகுதி 2 முனையத்திலும், பெரிய அளவில் 3டி திரைகள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு , பயணிகளுக்கு நினைவில் நிற்கும் அனுபவமாக, வருகை முனையங்களில் முப்பரிமாண சித்திரம் திரையிடப்பட்டது.#happydiwali2025 @MoCA_GoI | @AAI_Official pic.twitter.com/zDLE15sVWB
— Chennai (MAA) Airport (@aaichnairport) October 20, 2025
இந்த திரைகளில், இந்தியாவின் இயற்கை அழகுகள், முக்கிய சுற்றுலா தலங்கள், வனவிலங்குகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.
பயணிகளுக்கு இதன் மூலம் புதிய அனுபவம் மற்றும் மகிழ்ச்சி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3டி காட்சிகளை நிரந்தரமாக மாற்றும் திட்டம் இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
