50,000 இடங்களில் இன்று சிறப்பு முகாம்!! மக்களே… மிஸ் பண்ணாதீங்க!!

 
50,000 இடங்களில் இன்று சிறப்பு முகாம்!! மக்களே… மிஸ் பண்ணாதீங்க!!


தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் 12 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் மட்டுமே இன்று 1600 இடங்களில் கோவிட் தடுப்பூசி முகாம் செயல்படுகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் இதுவரை 6.71 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

50,000 இடங்களில் இன்று சிறப்பு முகாம்!! மக்களே… மிஸ் பண்ணாதீங்க!!

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. நவம்பர் இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

50,000 இடங்களில் இன்று சிறப்பு முகாம்!! மக்களே… மிஸ் பண்ணாதீங்க!!

ஏற்கனவே தமிழகத்தில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நவம்பர் 28ம் தேதி 12வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. 76 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web