பெரும் சோகம்... 5ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை... கதறித் துடித்த பெற்றோர்!

 
பள்ளி மாணவி

  தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உடையாம்பாளையத்தில் வசித்து வருபவர்  சரவணன். இவருடைய மனைவி மஞ்சுளா இவர்களுக்கு இரண்டு மகள்கள்.  அதில் மூத்த மகள், தாத்தா வீட்டில் தங்கி இருந்து 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தங்கையான அக்க்ஷயா பெற்றோருடன் இருந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை செய்யும்படி அக்க்ஷயாவிடம் மஞ்சுளா கூறியதாக தெரிகிறது. பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மஞ்சுளா, சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு அக்க்ஷயா தொங்கி கொண்டிருந்தாள்.  

போலீஸ்

அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அக்க்ஷயாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அக்‌ஷ்யா   ஏற்கனவே  உயிரிழந்துவிட்டாள் எனக் கூறினர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web