ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்து கொலை.. மற்றொரு மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. தாய் வெறிச்செயல்!

 
திவ்யா

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் ராம்குமார் என்ற நபருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் லக்ஷ்மண்குமார், ஒன்றரை வயதில் புனித்குமார் என இரு குழந்தைகள் இருந்தனர். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவுக்கும், ராம்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திவ்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் புல்லாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கொலை

இந்நிலையில் திவ்யா இன்று வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஒன்றரை வயது சிறுவன் புனித்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து லட்சுமணகுமாரின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​ஒன்றரை வயது குழந்தை புனித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த லட்சுமணகுமார், திவ்யா இருவரையும் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக திவ்யா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web