ஒருதலை காதல் விவகாரம்.. வேறொரு நபரை திருமணம் செய்ய முயன்ற பெண்ணை கோடாரியால் தாக்கிய இளைஞர்!

 
ஷியாம் சரண் சவுகான்

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பாரு பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் சவுகான். அவர் தனது பக்கத்து வீட்டுக்காரரான கியான் லட்சுமியை காதலித்து வருகிறார். ஷியாம் தனது காதலை ஒப்புக்கொண்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் கியான் லட்சுமி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து, அவரை தனது சகோதரராக ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். இதனால், ஷியாம் அந்தப் பெண்ணின் மீது கோபமாக இருந்தார். ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது லட்சுமி ஷியாமின் கையில் ராக்கி கட்டியுள்ளார்.

கோடாரி

இதற்கிடையில், லட்சுமி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு, ஷ்யாம் மேலும் கோபமடைந்து, நேற்று (10-01-25) கோடரியை எடுத்துக்கொண்டு லட்சுமியின் வீட்டிற்கு வந்தார். அங்கு லட்சுமியை கோடரியால் தாக்க முயன்றார். ஆனால் அந்தப் பெண் தப்பித்து ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் இரண்டு சகோதரிகள் மற்றும் தாயார் அவரைத் தடுக்க முயன்றபோது, ​​அவர் அவர்களையும் தாக்கினார்.

போலீஸ்

இதில் அவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஷியாம் சரண் சவுகானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web