சோகத்தில் முடிந்த ஆன்மிக பயணம்... மேல்மருவத்தூருக்கு வந்தவர்கள் ராட்சத அலையில் சிக்கி பரிதாபம்...!

 
மேல்மருவத்தூர்


கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மல்லூர் தாலுக்காவில்  புராலம் கிராமத்தில் வசித்து வரும் 75 பக்தர்கள் ஒன்றாக இணைந்து  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு  ஆன்மீக பயணம் வந்துள்ளனர். கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக அனைவரும் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்த பிறகு கடற்கரையில்  அவர்களில் 5 பேர் கடலில் குளித்துள்ளனர். இதில் நவீன்(24) தனுஷ்(27), முரளி(வயது29) ஆகிய 3 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது.

மகாபலிபுரம்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த அரசு உயிர்காப்பாளர் ராஜி(வயது48)  என்பவர் கடலில் நீந்தி சென்று மிதவை உதவியுடன் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தார்.  இதில் ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய ரஞ்சித், முரளி இருவரையும் மட்டும் மிதவை உதவியுடன் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.  நவீனை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் படகில் சென்று நவீன் உடலை தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  நவீனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அங்கு ஒரு கம்பெனியில் டெம்போ டிவாலர் டிரைவராக பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.  

மகாபலிபுரம்

உடன் வந்த அவரது தாய் அனிதா(53) தன் மகன் உயிருடன் கண்டுபிடிக்கப்படுவானா?  அல்லது பிணமாக அவனது உடல் எப்போது கரை ஒதுங்கும் என, ஒரு தாயாக அழுத முகத்துடன் கடலை நோக்கி கண்ணீரும், சோகத்துடன் பார்த்து கொண்டுள்ள காட்சி காண்போர் நெஞ்சை உருக வைத்துள்ளது. மேலும்  மேல்மருவத்தூருக்கு ஆன்மீக பயணம் வந்து சோக பயணமாக மாறிய நிலையில், தங்கள் மேல்மருவத்தூர் பயணத்தை ரத்து செய்து நவீன் உடல் எப்போது? கிடைக்கும் எப்போது ஊர் திரும்புவது? என கடற்கரையில் சோகத்துடன் 75 கர்நாடகா பக்தர்கள் காத்துக்கிடக்கின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web