2 கணவருடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி பேட்டி!
உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு கணவர்களுடன் வாழ்வதாக கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அங்குள்ள தியோரியா பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் கழுத்தில் இரண்டு தாலிகளை அணிந்துள்ளார். அந்த பெண் இரண்டு ஆண்களின் தோள்கள் மீது கை வைத்து போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அவர்கள் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் மூன்று பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கின்றனர். இரண்டு கணவர்களுக்கும் இரண்டு தாலிகள் அணிவிப்பதாக அந்த பெண் கூறினார். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்க மூன்று பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் போவோம். நாங்கள் ஒன்றாக சாப்பிடுகிறோம்.
நாங்கள் ஒன்றாக தூங்குகிறோம். தனது இரு கணவர்களுடனும் தனது நேரத்தை திறம்பட நிர்வகிப்பதாக அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இணையவாசிகள் பலரும் அதிர்ச்சி கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!