அதிரடி ஆபர்! இதை மட்டும் கொடுத்தா போதும் ! பெட்ரோல் ஃப்ரீ!

 
அதிரடி ஆபர்! இதை மட்டும் கொடுத்தா போதும் ! பெட்ரோல் ஃப்ரீ!


இந்தியாவில் அந்த வரி , இந்த வரி என பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டு பெட்ரோல் விலை பல மாநிலங்களில் ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மக்களின் குறை தீர்க்கவும், அவர்களை பெட்ரோல் போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரடி ஆபர்! இதை மட்டும் கொடுத்தா போதும் ! பெட்ரோல் ஃப்ரீ!


இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்கில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றின் நகலை கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.


தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு நகல்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒரு லிட்டர் இலவசமாக பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கி வருகிறது.

அதிரடி ஆபர்! இதை மட்டும் கொடுத்தா போதும் ! பெட்ரோல் ஃப்ரீ!


இந்த இலவச பெட்ரோலை பெறுவதற்காக பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க்கிற்கு தொடர்ந்து வந்து கொண்டே உள்ளனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்று வருகின்றனர்.

From around the web