வேளாண் சட்டங்களை திரும்ப பேற ஒப்புதல்!!

 
வேளாண் சட்டங்களை திரும்ப பேற ஒப்புதல்!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பேற ஒப்புதல்!!

கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினர். விரைவில் இந்த போராட்டங்கள் ஓராண்டை நிறைவை செய்கின்றன.

வேளாண் சட்டங்களை திரும்ப பேற ஒப்புதல்!!

சமீபத்தில் குருநானக் ஜெயந்தி நாளில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார். அதற்கான நடவடிக்கை குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web