மன்மோகன் சிங் மறைவு... இன்று அதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து!
மன்மோகன் சிங் மறைவு... இன்று அதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ரத்து!
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வந்த மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று டிசம்பர் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!