அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

 
அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

தமிழகத்தில் திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள், கருத்துவேறுபாடு, சசிகலா விவகாரம் என பல பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன. இவை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே தீர்வுக்காக பிரதமரை சந்தித்துள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சபாநாயகராக பொறுபேற்றுள்ள அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக வை விற்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லியின் வீதிகளில் அலைந்து வருகின்றனர்.

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வதே முறை. சசிகலா மீண்டும் அழைத்தால் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறேன். இனி இந்த கட்சியை காப்பாற்றுவது சசிகலாவின் கைகளில் தான் உள்ளது.

இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது. பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் செயல்பாடுகள் அமையலாம். விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web