விமான பயணிகளே உஷார்... பயண நேரத்துக்கு முன்னாடியே புறப்படுங்க... நாளை ஜன.30ம் தேதி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

 
knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

விமான பயணிகளே... உங்கள் பயண நேரத்துக்கு வழக்கமாக கிளம்புவதை விட கொஞ்சம் முன்னாடியே சரியா திட்டமிட்டு கிளம்புங்க. சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு என்பதால் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடைசி நேரத்துல விமான நிலையத்திற்குள் நுழைந்து, அப்புறமாக விமானத்தைப் பிடிக்க முடியவில்லை என்று வருத்தப்படாதீங்க. தேவையற்ற  லக்கேஜ்களைக் குறைச்சுடுங்க.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நாளை ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்

ஜனவரி 24, 25, 26 ஆகிய 3 நாட்களிலும் உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு நீடிக்கிறது.

பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகள் முதல்  விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும், தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. 

விமானம் விமான நிலையம்
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலையம் பயணிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  இதை வழக்கமான அறிவுறுத்தலாக எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரமாக உங்கள் பயண நேரத்தை திட்டமிடுங்க.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web