உஷார்... இன்று மாலை வரை மின்சார ரயில்கள் ரத்து... கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கம்!

 
ரயில்

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 வரை சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

மின்சார ரயில்

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஜனவரி 5ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இடையே இயக்கப்படும் இரயில்கள் பல்லாவரம் வரையும், அதே போல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பேருந்து

எனவே, இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் இன்று, தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்க உள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web