ஆம்புலன்ஸ் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு... பாத யாத்திரை சென்ற போது சோகம்!
திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சித்தூரில் இருந்து பாதயாத்திரையாக திருப்பதி திருமலைக்கு சென்றுக் கொண்டிருந்த போது, ரங்கம்பேட்டை அருகே ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக ஓட்டுநருக்கு சரியாக சாலை தெரியாமல் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!