திடீரென உல்லாசத்துக்கு மறுத்த இளம்பெண்... நடுரோட்டில் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்!
கணவரை விட்டு தனியே பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், திடீரென பழக்கத்தை நிறுத்தி விலகிச் சென்றதால் நடுரோட்டில் கள்ளக்காதலன் கத்தியால் குத்தி கொலைச் செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி (39), இவர் நேற்று முன்தினம் இரவு சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பைக்கில் வந்த ஒருவர் பாஞ்சாலியிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த சமுத்திரவேல் என்பவர் பாஞ்சாலியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.சமுத்திரவேல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்து வந்தது. இதன் காரணமாக பாஞ்சாலியை என் விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தினேன். ஆனால் அவளுடைய மகன்கள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் அவள் என் விருப்பத்திற்கு இணங்க மறுத்து விட்டாள்.
இந்நிலையில் அவள் கடைக்கு வந்ததும், அவளை வழிமறித்து என் விருப்பத்திற்கு இணங்க மீண்டும் வற்புறுத்தினேன். அவள் மறுத்ததால், நான் அவளை கத்தியால் பலமுறை குத்தினேன். இதில் அவர் உயிரிழந்தார். போலீசார் என்னை கைது செய்துள்ளனர்” என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!