சொத்துக்களை எழுதி தர மறுத்ததால் ஆத்திரம்.. வீட்டிற்கு தீ வைத்த கொடூர மகன்.. பெற்றோர்கள் துடி துடித்து பலி!

கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவி பாரதி (90). இவர்களின் மகன் விஜயன். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராகவன் மற்றும் பாரதியின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. விஜயன் தனது பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து, முழு சொத்தையும் தனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் பெற்றோர் பின்னர் தருவதாகக் கூறினர். ஆனால் விஜயன் அதை ஏற்க மறுத்ததால், அவர் தனது பெற்றோரை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். அதற்குள், வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது, ராகவனும் பாரதியும் கருகி இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கமாக பெற்றோருடன் வீட்டில் இருக்கும் விஜயன் திடீரென காணாமல் போய்விட்டார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. எனவே, தகராறு காரணமாக பெற்றோரை அடித்து கொன்று வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் உடனடியாக தேடி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!