அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

 
பாலியல் ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தன் சொந்த முயற்சியில் எடுத்துக்கொண்ட நிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

ஞானசேகரன்

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு அடையாளம் கண்டுள்ளது. அவரை கைது செய்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை தவிர 4 பேர் இருப்பதும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெற்று விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.

 ஞானசேகரன்

ஆபாச வீடியோக்களில் பெண்கள், மாணவர்கள் உட்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு அடையாளம் கண்டுள்ளது. பல ஆபாச வீடியோக்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் சிறப்பு புலனாய்வுக் குழு அடையாளம் கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்  குழுவின் பரிந்துரையின் பேரில், ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web