அதிமுக சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!
Oct 18, 2021, 09:22 IST
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.அந்த வகையில் தற்போது விஜயபாஸ்கர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
From around the
web