பைக் மீது ஆட்டோ மோதி கோர விபத்து... தந்தை பலி.. மகன் படுகாயம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது 7 வயது மகன் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பூசனூர், கீழத் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் உதயகுமார் (37) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று தனது மகன் முத்தமிழன் (7) உடன் விளாத்திகுளத்தில் உறவினர் வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மார்த்தாண்டம்பட்டி அருகே வரும்போது, தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற ஒரு ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தந்தை மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயக்குமார் பரிதாபமாக இறந்தார். மகன் முத்தமிழன் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோவை ஓட்டி வந்த குருவார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜெயம் பெருமாள் மகன் பாலமுருகன் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!