அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

 
அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

தீபாவளி நவம்பா் 4ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை தான். தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் துணிக்கடைகள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு பரிசுகளை அறிவிப்பதும் வழக்கமே. துணிகளுக்கு தள்ளுபடி, வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்குதல் என பல வகையில் வாடிக்கையாளர்களை கவர்வர்.

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!


திருவாரூரில் அமைந்துள்ளது சாரதாஸ் என்ற துணிக்கடை இந்த துணிக்கடையில் துணி வாங்கினால் பரிசுப்பொருள் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நியூ சாரதாஸ் துணி கடை மணிமுருகனுக்கு சொந்தமானது. அந்த பகுதியில் சுமார் 17 வருடமாக இந்த கடையை நடத்தி வருகிறார். சிறிய கடையாக தொடங்கிய இந்த ஜவுளி கடை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று பெரும் ஜவுளிக்கடையாக உருவெடுத்துள்ளது.

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

இந்த ஜவுளிக்கடை 5 வருடங்களாக பரிசுகளை குலுக்கல் முறையில் தீபாவளி பண்டிகைக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு 4 கிராம் தங்கம், 2 முதல் 4வது பரிசு வரை 4 பேருக்கு ஆடு, 5 வது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளை பரிசாக அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் “எனது ஜவுளி கடைக்கு வரும் அனைவரும் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள். கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. பலரும் வேலை இழந்துள்ளனர். அவர்களில் யாரேனும் எனது ஜவுளிக்கடையில் துணி வாங்கி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுகளுக்கான ஐடியா என் மனைவியினுடையது எனத் தெரிவித்துள்ளார்.

From around the web