இந்திய விமானங்களுக்கு ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு!

 
இந்திய விமானங்களுக்கு ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன்.

இந்தியாவில் அதிதீவிரமாக பரவிய கொரோனா காரணமாக ஏப்ரல் 22 ம் தேதிஇந்திய பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு ஜூலை 21 ம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 21 ம் தேதி வரை பயணிகள் விமானங்களுக்கான கனடாவின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனடா போக்குவரத்து துறை அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்தியாவில் நிலைமை இன்னும் மிக மோசமாகவே உள்ளது எனவும், டெல்டா வகை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web